இந்த வலைப்பதிவில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமை பெறப்பட்டவை. "இமயகிரி சித்தரின்" அனுமதியின்றி பிரதி எடுக்கவோ மற்றதளங்களில் மறுபதிவு செய்வதோ தடைசெய்யப்பட்டுள்ளது.

Translate

Tuesday 23 December 2014

சனி தோஷம் தீர சித்தர் வழி பரிகாரங்கள் - Sani Dhosham Pariharam

சனி தோஷம் தீர சித்தர் வழி பரிகாரங்கள் - Sani  Dhosham Pariharam





சனி தோஷம் தீர சித்தர் வழி பரிகாரங்கள் - Sani  Dhosham Pariharam

மனிதர்கள் வாழ்க்கையில் ஏற்படும் அனைத்து துன்பங்களையும் கண்டறிந்து அவைகளை இன்பமயமான வாழ்க்கையாக மாற்றுவதற்காக இறைவனின் அருளால் சித்தர்களாலும், முனிவர்களாலும், ரிஷிகளாலும், தங்கள் ஞானத் தால் கண்டறிநத தெய்வீக கலைகள்தான் மணி, மந்திரம், அவுஷதம் என்ற முப்பெரும் கலைகள் ஆகும்.

இவை
ஜோதிடம், மந்திரம், மருத்துவம் எனப்படும். இப்பெரும் கலைகளினால் மனிதகுலம் இன்று வரை மனம் உடல் வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்களில் இருந்து விடுபட்டு பெரும் நன்மை அடைந்து வருகின்றது. மனிதர்களின் வாழ்க்கையில் ஏற்படும் பல்வேறு துன்பங்களுக்கு நவக்கிரகங்களின் பார்வை (கதிர் வீச்சு) ஒரு காரணம் என ஜோதிட சாஸ்திரம் வலியுறுத்துகிறது.

நவகிரங்கள் எனப்படும் ஒன்பது கிரகங்களில் மூன்று கிரகங்கள் தீய பலன் கள் அளிப்பதில் வலிமை வாய்ந்தவை. அவை
ராகு, கேது, சனி ஆகும். இவை களில் முதன்மையானது சனி என்ற சனீஸ்வர பகவான்தான். சனீஸ்வர பகவானின் பிடியிலிருந்து யாரும் தப்ப முடியாது என்பர்.

இறைவனாகிய சிவ பெருமானையே ஒரு கணம் பிடித்ததால்தான் சனி ஈஸ்வர பட்டம் கிடைத்து சனீஸ்வரன் ஆனார். பனிரென்று ராசிகளில் உள்ள ராசிக்காரர்களுக்கு சுமார் ஏழு ராசிகளின் அமைப்பு உள்ளவர்களுக்கு ஏதாவது ஒரு வகையில்
ஏழரை சனி, கண்ட சனி, அஷ்டமசனி போன்ற பாதிப்புஇருந்துகொண்டேஇருக்கும். 

இதனால்  அவர்களுக்கு வாழ்வில் எடுத்த  காரியங்களில் தோல்வி, பண முடக்கம், வம்பு, சண்டை, விரக்தி, தொழில் முன்னேற்றமின்மை எதிர் காலமே சூன்யமானது போன்ற இன்னல்களுக்கு ஆட்பட்ட வாழ்க்கையை மிகவும் சிரமமாக அனுபவித்து கொண்டிருப்பார்கள்.

சனீஸ்வர தோஷத்தின் பிடியில் உள்ளவர்கள் பல்வேறு கோவில்களுக்கு சென்று நவகிரங்களுக்கு தீபம் போட்டு அர்ச்சனை அபிஷேகம் செய்தும்
சரிவர பலன் காணாமல் மனம் நொந்த நிலையில் இருப்பார்கள். இதற்கு பரிகாரமாக சித்தர்கள் மிக எளிய வழிமுறைகள் வகுத்துள்ளனர்.


சனி தோஷ நிவர்த்தி பரிகாரம் : 1

சனி தோஷம் - பிடியிலிருந்து விலக அகத்திய பெருமான் கூறும் வழிமுறை பாடல் விளக்கம்.

கோனவனார் குடியிருந்த பிடரிதன்னில் 
கொள்கிநின்றார் சனியனெனும் பகவான்றானே
தானென்ற சனிபகவான் பிடரிமேலே 
தானேறி நின்றுகொண்டு தலைகால் வேறாய் 
கோனென்ற அறிவுதனை நிலைக்கொட்டாமல் 
குடிலமென்ற குடிலமெல்லாங் கூறாய்ச் செய்து 
நானென்ற ஆணுவமே நிலைக்கப்பண்ணி 
நன்னையென்ற வெளிகளெல்லா மிருளாய்க் கட்டி 

கானென்ற கபடமதுக் கேதுவாய் நின்று 
கரையேற வொட்டாமல் கருதுவானே 
கருதுகின்ற சனிபகவான் பிடரிமேலே 
கவிழ்ந்து நின்ற பாசமதைக் களையவேண்டி 
சுருதிபொரு ளானதொரு நாதன்பாதம் 
தொழுதுமன துறுதியினால் துகளறுத்து 
நிருதியெனுஞ் சாபமது நிவர்த்தியாக 
நீமகனே சொல்லுகிறே னன்றாய்க்கேளு

பருதிஎனும் ரவிதனையே நமஷ்கரித்து 
பாங்குடனே ஓம் கிலி சிவவென்று சொல்லே 
சொல்லிடுவாய் தினம்நூத்தி யிருபத்தெட்டு 
சோர்வின்றி மண்டலமே செபித்தாயாகில் 
வல்லுடும்பாய் நின்றசனி மாறிப்போகும் 
மகத்தான மந்திரமுஞ் சித்தியாகும்  

மேற்கண்ட பாடலின் விளக்கம் :

இறைவன் குடியிருக்கும் அறிவாகிய பிடரிதன்னில் சனி பகவான் ஏறி  நின்று கொண்டு அறிவுதனை தலைகீழாய் மாற்றி தான் என்ற ஆணவத்தை நிலைக்கச்செய்து, உண்மையை பொய்யாய் காட்டி,நல்ல வர்களை கெட்டவர்களாகவும்,கெட்டவர்களை நல்லவர்களாகக் காட்டி, புத்தியை மாற்றி, பொய் ,களவு ,மது ,மாது ,சூது ,போன்ற வைகளுக்கு புத்தியை அடிமையாக்கி வாழ்க்கையை கரையேற விடாமல் தடுப்பார்.
 
நீரில் பாசம் போல் படிந்து நின்றது போல் நம் மேல் படிந்துள்ள சனீஸ்வர தோஷத்தை நீக்கிக்கொள்ள இறைவனின் பாதம் தொழுது ஒரு உபாயம் கூறுகிறேன் .

அதிகாலை குளித்து முடித்து கிழக்கு நோக்கி நின்று கொண்டு பருதி எனும் சூரிய பகவானை வணங்கி "ஓம்  கிலி  சிவ" என்ற மந்திரத்தை  -128-முறை  செபிக்கவும்.இப்படி ஒரு மண்டலம் - 48-நாட்கள் தொடர்ந்து செபித்து வர உடும்பு போல் பற்றி நின்ற சனீஸ்வர தோஷம் விலகி விடும்.இது ஏராளமானோர் செய்து பயனடைந்த முறை.


சனி தோஷ நிவர்த்தி பரிகாரம் : 2  

சனி தோஷ நிவர்த்தி மூலிகை :

இந்த மூலிகை கொல்லிமலையில் ஆகாய நீர் வீழ்ச்சி அருகில் விளைந்துள்ளது.இம் மூலிகையை சாப நிவர்த்தி செய்து எடுத்து வந்து சனிக்கிழமை அன்று சனி ஓரையில் அரைத்து உடல் முழுதும் பூசி அரை மணி நேரம் கழித்து குளிக்கவும். இது போல் மூன்று நாள் குளிக்க ஏழரை சனி, அஷ்டம சனி, கன்ட சனி, பாத சனி போன்ற அனைத்து தோஷமும் தீரும்.

சனி தோஷ மூலிகை விளக்க வீடியோ :

குறிப்பு : சனி தோஷம் தீர்வதற்கு பலவிதமான கோவில்கள், குளங்கள், தீர்த்தங்கள், பரிகாரங்கள் செய்தும் துன்பங்கள் தீராதவர்களுக்கு மேற்கண்ட முறைகள் மட்டுமில்லாமல் எமது சித்தர் வேதா குருகுலத்தில் அனைத்து வகையான சனி தோஷமும் முழுமையாக தீர்வதற்கான அற்புதமான வழிமுறைகள் உள்ளன.


நன்றி !
மெய்திரு, இமயகிரி சித்தர்...
சித்தர் வேதா குருகுலம்
சிவராம் நகர்,
திருவானைக் கோவில் – P.O
திருச்சி – 620006
Cell No : 9865430235 - 9095590855





Wednesday 10 December 2014

வேந்தர் T V மூன்றாவது கண்' ல் எமது நிகழ்ச்சி - சுருளிமலை அதிசயங்கள் - Moondravathu Kan

வேந்தர் T V மூன்றாவது கண்ல் எமது நிகழ்ச்சி - சுருளிமலை அதிசயங்கள்   - Moondravathu Kan  












வேந்தர் T V மூன்றாவது கண்' ல் எமது நிகழ்ச்சி - சுருளிமலை அதிசயங்கள்   - Moondravathu Kan  

சுருளிமலை பற்றிய எமது விளக்க உரையுடன் சுருளிமலை அதிசயங்களை தொகுத்து வேந்தர் டிவி யில் மூன்றாவது கண் நிகழ்ச்சியில் 3/12/2014 ம் தேதி அன்றும், 8/12/2014 ம் தேதி அன்றும் இரண்டு நாட்கள்,இரவு 9,30 மணிக்கு இரண்டு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகியது.


இதில் 3/12/2014 ம் தேதி அன்று இரவு 9,30 மணிக்கு :

ராகு கேது காட்சி தரும் குகை...!
சித்தர்கள் தவம் செய்யும் குகை...!
பூர்வ ஜென்ம தோஷங்களை போக்கும் நள்ளிரவு யாகம்...!
சிவன் தவம் செய்த குகைக்கு ஓர் நேரடி விசிட்...!

காணக்கிடைக்காத அரிய காட்சிகள் என்ற தலைப்பில் உலகத் தொலைகாட்சி வரலாற்றில் முதல் முறையாக இறைவன் சிவபெருமான் தவம் செய்த குகையின் நேரடிக்காட்சிகளும்,பூர்வ ஜென்ம தோஷங்களை போக்கும் நள்ளிரவு யாகம் நடைபெற்ற அரிய காட்சிகளும் ஒளிபரப்பாகியது.


மேலும்  8/12/2014 ம் தேதி அன்று இரவு 9,30 மணிக்கு :

முனிவர்கள் சாபமிட பயன்படுத்திய உதக நீர் ...!
இந்த நீர் பட்டால் நீங்களும் கல்லாக மாறுவீர்கள்...!
இலைகளும் பிளாஸ்டிக் பொம்மைகளும் கல்லாக மாறிய அதிசயம்...!

என்ற தலைப்பில் அதிசய காட்சிகளும் உதக நீர் பற்றிய சித்தர்கள் கண்டறிந்த மெய்ஞான விளக்கங்களும், பறவைகள் விலங்குகள் கல்லாக மாறிய இன்றைய அறிவியல் ஆய்வு விளக்கங்களுடன் ஒளிபரப்பாகியது.  இந்த இரண்டு நிகழ்ச்சிகளும் எமது விளக்க உரையுடன் ஒளிபரப்பாகியது என்பது குறிப்பிடத்தக்கது.இந்த நிகழ்ச்சி படப்பிடிப்பின் போது நடந்த அமானுஷ்ய சம்பவங்களையும், சுருளிமலை அதிசயங்களையும் நமது "சித்தர் பிரபஞ்சம்" தளத்தில் அடுத்த பதிவில் வெளியிடுகின்றோம். 


வேந்தர் டிவி யில், மூன்றாவது கண் நிகழ்ச்சியில் ஒளிபரப்பாகிய மேற்கண்ட இரண்டு நிகழ்ச்சிகளின் பதிவுகள் யூ டியூப் [You Tube] தளத்தில் விரைவில் வெளிவரும்.  


நன்றி : வேந்தர் T.V - மூன்றாவது கண் - Director & Team 


நன்றி !
மெய்திரு, இமயகிரி சித்தர்...
சித்தர் வேதா குருகுலம் 
சிவராம் நகர், திருவானைக்கோவில் - P.O
திருச்சி - 620005 
செல் : 9865430235 - 9095590855


   


Wednesday 26 November 2014

பித்தப்பை கல் குணமாக்கும் சித்த மருத்துவம் - Gallstone cure

பித்தப்பை கல் குணமாக்கும் சித்த மருத்துவம் -  Gallstone  cure




பித்தப்பை கற்கள்


பித்தப்பை கல் குணமாக்கும் சித்த மருத்துவம் -  Gallstone  cure


பித்தப்பை

பித்தப்பை உடலின் ஜீரண மண்டலத்தின் ஒரு உறுப்பு ஆகும். பேரிக்காய் போன்றது.  7 – 10 செ.மீ நீளமுள்ள, கல்லீரலின் வலதுபக்கத்தின்  கீழே தொங்கும் பை ஆகும்.


பித்தப்பை பித்த நீரை சேமித்து வைக்கிறது. பித்த நீரிலிருக்கும் தண்ணீர், 90 சதவிகிதம் பித்தப்பையிலிருந்து ரத்தத்தில் உறிஞ்சப்பட்டுவிடுகிறது.    இதனால்,  மீந்த பித்த நீர், கெட்டியாக இருக்கும்.பித்த நீர், கெட்டியான, காரத்தன்மை  உடைய திரவம். இது கல்லீரலால் சுரக்கப்படுகிறது.


பித்த நீரின் உபயோகம்

பித்த நீர் உடலின் சில நச்சு கழிவுப் பொருட்களை வெளியேற்ற உதவுகிறது.
கொழுப்பு சத்துக்களை உடல் ஜீரணிக்க உதவுகிறது.
தவிர, கொழுப்பில் கரையும் விடமின்களை உடல் ஏற்றுக்கொள்ள உதவுகிறது.
முன்சிறுகுடல் ஏற்படும் அலை போன்ற தசை அசைவுகளை ஊக்குவிக்கிறது.
பித்த நீர், பெருங்குடலை தூண்டி, அதிக தண்ணீரை சுரக்க வைக்கிறது. இதனால் உணவுக் கூழை வெளியே தள்ளுகிறது, சுலபமாகிறது.


பித்த நீரின் வர்ணம், மஞ்சள், பச்சை, பழுப்பு நிறமாக மாறிவரும்.காரணம் எந்த வகை பித்த உப்புகள் அதிகமாக இருக்கின்றதோ, அதன் படி பித்த நீரின் நிறம் இருக்கும். பொதுவாக பைலீரூபின் ஆரஞ்ச் அல்லது மஞ்சள் நிறத்தில் இருக்கும். பைலிவெர்டின் பச்சை நிறத்தில் இருக்கும்.


கல்லீரலிலிருந்து பித்த நீர், கல்லீரலின் வலது, இடது குழாய்கள் மூலம் வெளிவரும். இந்த இருகுழாய்களும் கல்லீரல் குழாயாக இணைந்து விடும். இந்த கல்லீரல் குழாய், பித்தப்பையிலிருந்து வரும் சிஸ்டிக் குழாயுடன்  சேர்ந்து பொதுவான பித்த நீர் குழாயாகும். கோலிசிஸ்டோகினின் என்ற ஹார்மோனின் உதவி, உந்துதலுடன் முன்சிறுகுடலை அடைகிறது.


முன்சிறுகுடலில் உணவு வந்தடையும் போது இந்த . கோலிசிஸ்டோகினின் ஹார்மோனை சுரக்கும். உணவு முன்சிறுகுடலை அடைந்தவுடன், பித்தப்பைக்கு செய்தி வரும். அது சுருங்கி ஒரு வால்வை திறந்து, சிறுகுடலில் பித்த நீரை கொட்டும். உணவும் பித்த நீர் கலந்து, ஜீரணமாகும். மீந்த பித்த நீர் உப்புக்கள் குடல் சுவர்களால் உறிஞ்சப்பட்டு மறுபடி சுழற்சியாக திரும்ப திரும்ப உபயோகப்படும் இந்த சுழற்சி ஒரு நாளில் உடலில் 10-12 தடவை நடக்கும்.


பித்தப்பை கற்கள் தோன்றுவதற்கான காரணங்கள்

பித்தப்பை கற்கள் ஏன் ஏற்படுகின்றன என்பது பற்றி துல்லியமாகக் கூறமுடியாத போதும் யார் யாருக்கு வரக் கூடும் என்பதை ஆய்வுகள் சில காரணங்களைத் தெரியப்படுத்துகின்றன.


பொதுவாக ஆண்களை விடப் பெண்கள் அதிகமாகப் பாதிப்படைகிறார்கள். வயதில் மூத்தவர்கள் அதாவது 60 வயதைத் தாண்டியவர்களில் அதிகம் ஏற்படுகிறது என சொல்லப்பட்ட போதும் இளம்  வயதினரிடையேயும் தோன்றலாம்.


ஒருவரது பித்த நீரில் கொலஸ்டரோல் அளவானது வழமையை விட அதிகம் இருந்தால் பித்தக் கற்கள் தோன்றலாம். பொதுவாக ஈரலானது நமது குருதியில் உள்ள கொலஸ்டரோலை உறிஞ்சி பித்த நீர் ஊடாக வெளியேற்று கிறது. அவ்வாறு பித்தத்தில் கலக்கும் கொலஸ்டரோலின் அளவு வழமை போலிருந்தால் அது பித்த நீரில் கரைந்து சுலபமாக வெளியேறிவிடும். ஆனால் அதன் செறிவு அதிகமாக இருந்தால் கட்டிபட்டு கற்களாக மாறுகிறது.


உணவு முறையைப் பொறுத்த வரையில் நார்ப்பொருள் குறைந்த,  கொழும்பும் கொலஸ்டரோலும் அதிகமுள்ள உணவு வகைகளை உண்பவர்களிடையே தோன்றுவதற்கான சாத்தியம் அதிகமாகும்.


நீரிழிவு நோய் உள்ளவர்களிடையேயும் அதிகமாகக் காண்கிறோம். அதே போல ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களிடையேயும் அதிகம் காணப் படுகிறது. பெண்களின் கர்ப்பகாலத்திலும் சாத்தியம் அதிகமாகும்.


நோய்கள் காரணமாகவோ அல்லது உடல் எடை குறைப்பு முயற்சியின் போது திடீரென அதிகளவு எடையைக் குறையும் போதும் தோன்றலாம்.


உணவுகளை வேளை தவறாமல் உண்ணுங்கள். நீண்ட நேரம் பட்டினி கிடப்பதும், உணவுகளை சில வேளைகளில் தவிர்ப்பதும் உபவாசம் இருப்பதும் கற்கள் தோன்றுவதற்கான வாய்ப்பை அதிகரிக்கும்.
 

பித்தப்பை கல் அறிகுறிகள்

பித்தப்பை கற்களுக்கு அறிகுறிகள் பல வருடங்கள் தெரியாமலே போகலாம். பலருக்கு பித்தப்பையில் கல் உருவாகியிருக்கும். ஆனால், எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. வேறு காரணத்துக்காக பரிசோதனை செய்யும்போதுதான் பித்தப்பையில் கல் இருப்பது தெரியவரும். பித்தப்பை கல், பித்தப்பை குழாயில் அடைப்பை ஏற்படுத்தும்போதுதான் அதன் பாதிப்புகள் வெளிப்படும். 


அறிகுறிகள் வலது பக்கம் மேல் வயிற்றில் தாங்க முடியாத வலி ஏற்படும். இந்த வலி, சில நிமிடங்கள் முதல், நான்கு மணி நேரம் கூட நீடிக்கும். பித்தநீர் குழாயை பெரிதாக அடைக்கும் போது வலி, பிரட்டல், வாந்தி ஏற்படும். இந்த வலி மிகவும் அதிகமாக இருக்கும். மேல் வயிற்றில் ஏற்படும். உணவு உண்ட ஒரு மணி நேரத்திற்கு பிறகு இந்த வலி தாக்கலாம். பித்த நீர் அடைப்பட்டால், பேக்டீரியா உருவாகி பெருகி விடும். குழாய்களில் நோய் தொற்று ஏற்படும். கல்லீரலில் கட்டிகள், பிளவைகள் உண்டாகும். ஜுரம், குளிர் சுரம், காமாலை ஏற்படலாம். தொடர்ந்து  வலி, ஜுரம், தோள்பட்டை வலி இவை ஏற்படும்.


பித்தப்பை  கற்களால் எந்த அறிகுறியும் தென்படாத வரை, அதைப்பற்றி அலட்டிக் கொள்ளாமல் இருக்கலாம். அறுவை சிகிச்சை மூலம் பித்தபையை அகற்றினால் பிற்காலங்களில் அஜீரக் கோளறு, குடற்புண் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.


சித்த மருத்துவத்தில் சித்தர் நூல்களில் பித்தப்பை கற்களை குணப்படுத்தும் மருந்துகள் கூறப்பட வில்லை.மேலும் சித்த மருத்துவர்கள் பலர் பித்தப்பை கல் என்பதை சிறுநீரக கல் போன்ற வகையினை சார்ந்தது என நினைத்து சிறுநீரக கற்களை கரைக்கும் மருந்துகளான சிருநெருஞ்சில், சிறுபீளை, வெங்காரபற்பம், வெடியுப்பு பற்பம், கல்கரைச்சி மாத்திரை போன்றவைகளை கொடுத்து பித்தப்பை கல் குணமாகாமல் ஏமாற்றம் அடைகின்றனர்.


உண்மையில் பித்தப்பை கற்களை கரைக்கும் மருந்துகள் என்பது வேறு வகையானவை ஆகும். பித்தப்பை கற்களை கரைப்பதற்கான மருந்துகளை நமது சித்தர் வேதா குருகுலத்தில் எமது பிரத்யேக ஓலைச்சுவடிகள் மூலம் பல வருடங்களாக ஆய்வுகள் செய்து மூலிகைகள் மற்றும் இயற்கையான தாதுப்பொருட்கள் கொண்டு உருவாக்கப்பட்ட மருந்துகள் மூலமாக எந்தவித பக்க விளைவுகள் இன்றி முழுமையாக குணப்படுத்துகின்றோம்.இந்த சிகிச்சை முறையில் பித்தப்பை கற்கள் கரைந்து வெளியேறுவதை நீங்களே நேரில் காணலாம்.மேலும் நமது சிகிச்சையில் பலர் குணமடைந்துள்ளனர் என்பது குறிபிடத்தக்கது.  



முன் அனுமதி பெற்று வரவும்

நன்றி !

மெய்திரு, இமயகிரி சித்தர்
சித்தர் வேதா குருகுலம்
22, புஷ்பக் நகர், A.M ரோடு
ஸ்ரீரங்கம் P.O – திருச்சி D.T - 620006
தமிழ்நாடு – இந்தியா

அகத்தியர் குருகுலம், யோக ஞான பீடம்
அகஸ்தியர் புரம் , சிறுமலை புதூர்
திண்டுக்கல் – D.T - 624003
தமிழ்நாடு – இந்தியா
செல் :98654302359095590855 – 9655688786 - 8695455549








Monday 11 August 2014

பில்லி சூன்யம் ஏவல் தீர - ஓலைச்சுவடி அனுபவ முறை

பில்லி சூன்யம் ஏவல் தீர - ஓலைச்சுவடி அனுபவ முறை





பில்லி சூன்யம் ஏவல் தீர ஓலைச்சுவடி அனுபவ முறை 


இறைவன் மீதும், உழைப்பின் மீதும் முழுமையாய் நம்பிக்கை வைத்து தொழில் மற்றும் அலுவலகங்களில் உண்மையாய் உழைத்து வாழ்க்கையில் படிப்படியாக முன்னேற்றம் அடைந்து வரும் போது வளர்ச்சியை முடக்கவும்முன்னேற்றத்தை தடுக்கவும்,வாழ்க்கையை சீர்குலைக்கவும், மேலும் சொந்த பந்தம் பிரச்சனை, சொத்து பிரச்சனைக்காகவும், எதிரிகளால் ஏவப்படுவதே பில்லி, சூன்யம், ஏவல் ஆகும்.

இன்றைய விஞ்ஞான யுகத்தில் இது சாத்தியமா என்றால் இந்த தீவினைகளால் பாதிப்படைந்து துன்பங்கள் அனுபவிப்பவர்களுக்கே இது உண்மை என்று புரியும்.

பில்லி, சூன்யம், ஏவல் என்பது துன்மார்க்க மாந்திரீக முறைகளில் ஒன்றாக உள்ளது.

பில்லி, சூன்யம், ஏவல் இவைகளால்  ஏற்படும் தீவினைகளை முற்றிலும் அழிப்பதற்கான மந்திரம், எந்திரம் போன்ற சக்தி வாய்ந்த சூட்சும அனுபவ முறைகள் தெய்வீக மாந்திரீக முறைகளில் உள்ளன.இவைகள் சித்தர் வழி பாரம்பரிய குருகுல முறையில் ஓலைச்சுவடிகளில் பதிவு செய்யப் பட்டு பலநூறு வருடங்களாக பாதுகாக்கப்பட்டு எங்களது பயன்பாட்டில் உள்ளவைகள் ஆகும்.  

இந்த ஓலைச்சுவடி மாந்திரீக அனுபவ முறைகளை மக்களின் நன்மைக்காக வெளியிடுகின்றோம்.


1 - மேலே உள்ள முதல் ஓலைச்சுவடியில் உள்ள மந்திரம் :

பில்லி சூன்யம் மீளும் மந்திரம் 

ஓம் நமோ நாராயணா இறங்கு இறங்கு 
செம்பொன்னுடுத்தி செம்பொன்னால் குடையிட்டு வருகிற 
கால கால சர்வ பூத பிரேதப் பிசாசு சர்வ அற்ப பிசாசு 
சர்வ விடுவையும் சர்வ பில்லியும் சர்வ சூன்யமும் 
உன்னடி கண்டு உன்னடி வணங்கினாப் போலே 
என்னடி கண்டு என்னடி வணங்கச் சிவாகா 

மந்திரம் முற்றும் உரு 1008 செபிக்க சித்தியாகும்.


2 - எந்திரத்தில் உள்ளே வரையும் அட்சரங்கள் : இரண்டாம் ஓலைச்சுவடி

ஓ ம் சி வ ய 
ந ம சி வ ய 
ஓ ம் சி வ ய
ந ம சி வ ய
ஓ ம் சி வ ய

இரண்டாம் ஓலைச்சுவடியில் உள்ள எந்திரம் ஒரு தாமிர தகட்டில் எந்திர விதிமுறைப்படி வரைந்து மேற்கண்ட மந்திரம் கிரகணம் பிடிக்கும் வேளையில் உரு 1008 செபிக்க சித்தியாகும்.

மேற்கண்ட முறையில் செபித்து சித்தி செய்யப்பட்ட எந்திரத்தை உடலில் அணிந்து கொள்ள,அல்லது இல்லங்களில் பூஜை அறையில் வைத்து பூஜித்து வர பில்லி, சூன்யம், ஏவல் இவைகளால்  ஏற்படும் தீவினைகளை முற்றிலும் அழிந்து தெய்வீக அருள் பூரணமாக நிறைந்து விடும்.


முன் அனுமதி பெற்று வரவும்

நன்றி !

மெய்திரு, இமயகிரி சித்தர்
சித்தர் வேதா குருகுலம்
22, புஷ்பக் நகர், A.M ரோடு
ஸ்ரீரங்கம் P.O – திருச்சி D.T - 620006
தமிழ்நாடு – இந்தியா

அகத்தியர் குருகுலம், யோக ஞான பீடம்
அகஸ்தியர் புரம் , சிறுமலை புதூர்
திண்டுக்கல் – D.T - 624003
தமிழ்நாடு – இந்தியா
செல் :98654302359095590855 – 9655688786 - 8695455549








பதிவுகளின் வகைகள்